தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

262 0

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி மீன் பிடிக்க ஒரு விசைப்படகில் புறப்பட்ட நான்கு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றசாட்டில் காங்கேசன்துறை கடற்ப்டையினாரல் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களையும் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம்  நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது குறித்த 4 மீனவர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

Leave a comment