புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூற ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை – துமிந்த

271 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூறுவதற்கு அதிகாரம் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.  

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் காலங்களின் போது புதிய அரசியலமைப்பிற்கூடாக தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய எமது கடமையாகும். எனினும் எமது நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களால் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. 

இன்றும் அந்த நெருக்கடி நிலைமை முற்றாக குறைவடையவில்லை. எனவே தான் இவ்வாறான சூழலில் எஞ்சியுள்ள ஒரு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதனை புதிய அரசியலமைப்பு இனி உருவாகாது என தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்றார். 

Leave a comment