யாழ். சிறையிலிருந்த 9 கைதிகள் விடுதலை

335 0

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 9 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகளும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரப்படட ஒரு கைதியும் விடுவிக்கப்பட்டார்.

நான்கு பேர் சிறைச்சாலை அதிகாரிகளின் ஊடாக இன்று விடுவிக்கப்பட்ட  நிலையில். ஏனைய 5 பேரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்ச்கர் என்.மரில் லோ, பிரதான நிறை அதிகாரி என்.பிரபாகரன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கைதிகள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment