சிறுமி காணாமல்போன சம்பவம், கைதுசெய்யப்பட்ட அவரின் தாய், தாத்தா மற்றும் பாட்டி இன்று நீதிமன்றில் ஆஜர்

252 0

கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் புத்தளம் – கருவலகஸ்வெவ நீலபெம்ம பகுதியில் நான்கு வயது சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அவரது, தாய் பாட்டி மற்றும் தாத்தா ஆகியோர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

மேற்படி சிறுமியை கடந்த 29 ஆம் திகதி காணாமல் போனதாக அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைவாக பொலிஸார் கடந்த ஆறு நாட்களாக தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந் நிலையில் சிறுமி காணாமல் போயிருக்க வாய்ப்பு இல்லையென அந்த பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததுடன் குடும்பத்தினரே சிறுமிக்கு ஏதாவது செய்திருக்க கூடும் எனவும் குறிப்பிட்டிருந்தனர், இதையடுத்து பொலிஸாரின் தீவிர விசாரணையில், தனது மகளை தாக்கி கொலை செய்து கலாஓயவில் வீசியதாக சிறுமியின் தாய், வாக்குமூலம் வழங்யிருந்தார்.

அதையடுத்து சிறுமியின் தாய், பாட்டி மற்றும் அவரது தாத்தா கைதுசெய்யப்பட்டதுடன், பொலிஸார் சுழியோடிகள் மூலும் காலஓயாவில் சிறுமியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று பிற்பகல் புத்தளம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment