உள்நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது

260 0

உள் நாட்டில்  தாயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்புகளின் போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றுடன் இளைஞர்கள் மூவர் கெப் வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தப்போது நேற்றிரவு  8.40 மணியளவில் அக்கோபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதுல்வுதுவ பாலத்திற்கருகில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்த துப்பாக்கியும் , கெப் ரக வாகனமும் பொலிசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a comment