ஸ்ரீ ல.மு.காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம், 7 ஆம் திகதி விவாதம்- கிரியெல்ல

288 0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான  பிரேரணை எதிர்வரும் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரும் சபைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 48 இற்கு அதிகரிக்காமலும், அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கை 45 இற்கு அதிகரிக்காமலும் இருக்குமாறு தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்ககொள்ள உள்ளதாகவும் அப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் இந்த நடவடிக்கை கேலிக்குறியதாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ள ஸ்ரீ ல. சு.கட்சியின் உறுப்பினர்களை அன்றைய தினம் சபையில் கண்டுகொள்ளலாம் எனவும் ஐ.தே.க.யின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment