கடல் வழியாக தங்கம் கடத்திய இருவர் கைது

313 0

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியால் கடத்திக்கொண்டிருந்த 11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கல்பிட்டி, குடாவ பகுதியில் வசிக்கின்ற 33 மற்றும் 29 வயதானவர்களாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் தங்கம் கடத்த பயன்படுத்திய டிங்கி படகும் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைக்காக கொழும்பு, சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a comment