இனவாதியாக செயற்படும் பொதுபல சேனாவுக்கு பின்னால் மஹிந்தவே செயற்படுகிறார்.

313 0

robin-a1-600x450இந்த நாட்டில் இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் இன்று பொதுபலசேனா தமிழர்களுக்கு எதிராக தனது இனவாதத்தினை கக்கியுள்ளது.

இதன் செயற்பாட்டின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுகின்றார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பினை உருவாக்கியது மஹிந்தவின் ஆட்சியிலேதான்.

தமிழ மக்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என கூறுதவற்கு முன்னர் பொதுபலசேனா அமைப்பினர் இலங்கையின் பூர்வீக வரலாறுகளை மீண்டும் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் புத்த பெருமான் வருகைதந்த பின்னர்தான் பௌத்த மதம் இங்கு தோற்றம் பெற்றது.

அதற்கு முன்னர் இலங்கை நாட்டில் எந்த இனம், மதம் வாழ்ந்தது என்பதனை இங்கு யாவரும் அறிந்த விடயம்.

இந்த நல்லாட்சி அரசு இவ்வாறான இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை உடனடியாக தடுக்க வேண்டும்.

என்பதுடன் மீண்டும் இந்த நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நல்லாட்சி அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.