6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட ரூ.40 ஆயிரம் கோடி – பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

2368 0

இந்திய கடற்படைக்காக தேவைப்படும் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பாதுகாப்புத்துறை கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.


இந்த கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக தேவைப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. #

Leave a comment