யாழ் நாவந்துறையில் கஞ்சாவுடன் இருவர் கைது

246 0


யாழ்.நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நாவாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதே குறித்த கஞ்சா தொகையைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்றிரவு 7 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்தபோது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a comment