பள்ளத்தில் விழுந்த பஸ் – 25 பேர் வைத்தியசாலையில்

1643 0

1871133114Untitled-1பிபில – பதுளை வீதியின் உணகொல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் 25க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே, இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளது.

மேலும், விபத்து ஏற்பட்ட வேளை பஸ்சில் 35 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment