தேசிய அரசாங்கம் அமைக்க திறந்த அழைப்பு

4545 0

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய எந்தவொரு தரப்பினருக்கும் திறந்த அழைப்பு விடுவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார். 

ஜாஎல, ஏகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

அடுத்தகட்ட அரசியல் நிலைமை சூடானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல வேட்பாளர்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அவ்வாறு வேட்பாளர்கள் முன்வருவது சிறந்த ஜனநாயக நிலமை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்ககூடிய எந்தவொரு நபரையும் தேசிய அரசாங்கத்திற்கு இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a comment