உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை விரைவில்

262 0

கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 

அதேபோன்று கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்கள் மீள் பரிசீலைக்குரிய விண்ணப்ப திகதி முடைவடைந்துள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.

மீள்பதிப்பீடு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததன் பின்னர் பெறுபேறுகள் வெளியானதும், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டாடர். 

Leave a comment