தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் ஏமாற்றி விட்டது – மஹிந்தானந்த

238 0

மலையக மக்களின் நியாயமான சம்பள உயர்வு கோரிக்கையில் அரசாங்கமும்,  முதலாளிமார் சம்மேளனமும் மீண்டும் அம்மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்காது, சம்பள விவகாரத்தில் அரசாங்கமும் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரித்தமையானது அம்மக்களின் போராட்டத்திற்கு  பெறுபேறாக அமையாது எனவும் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் பொழுது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு  காண்பதாக குறிப்பிட்டது. அவ் வாக்குறுதிகளில் சம்பள அதிகரிப்பும் ஒன்றாக காணப்பட்டது. தற்போதும் அரசாங்கம்  மலையக மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எவ்விதமாக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment