சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் கைது

1208 0

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 24 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். 

அவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்களின் விசா காலம் நிறைவடைந்திருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட குறித்த இந்தியர்கள் 24 பேரும் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட உள்ளனர். 

இது சம்பந்தமாக விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அந்த அதிகாரி கூறினார்.

Leave a comment