பணக் கொள்ளையில் ஈடுபடும் இருவர் கைது

6436 0

நபர்களிடம் பலாத்காரமாக பணம் கொள்ளையிட முயற்சித்த பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் பியகம பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 03 கத்திகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பியகம பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் தற்போது சிறையிலுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற ஊரு ஜுவா என்கின்ற மாம்புனகே மிலான் மாம்புலன என்பவருடன் இணைந்து பணக் கொள்ளையில் ஈடுபடக் கூடியவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 

இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், திட்டமிட்ட குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

Leave a comment