ஆறு தமிழக மீனவர்களும் விடுதலை

341 0

இலங்கைக் கடலில் தத்தளித்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஆறு தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றம் நேற்று  விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கைக் கடற்பரப்பிற்கு அண்மையில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன் பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக குறித்த மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன.

இந்நிலையில் ஆறு மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது கடற்படையினரால் மீட்கப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஆறு மீனவர்களும் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆறு மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Leave a comment