கஞ்சா விற்பனை, பாவனைத் தொடர்பில் 130 வழக்குகள் பதிவு

265 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கஞ்கா விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் 130 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் புதுக்குடியிருப்பில் 24 வழக்குகளும்,முள்ளியவளையில் 32 வழக்குகளும்,வெலிஓயாவில் 26 வழக்குகளும்,முல்லைத்தீவில் 21வழக்குகளும்,மாங்குளத்தில் 13 வழக்குகளும்,மல்லாவியில் 09 வழக்குகளும்,ஒட்டுசுட்டானில் 05 வழக்குகளும் கடந்த 2018 ஆம் ஆண்டு பதியப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment