சிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா!

414 0

பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான தொர்சியில் தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டு விழா கடந்த (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்நிகழ்வில் மங்கல விளக்கினை வீரவேங்கை வேணுதாசன் பழனிசுவாமி ரகுராஜசிங்கம் அவர்களின் சகோதரி, கப்டன் சீத்தா நவரத்தினம் சாந்தி அவர்களின் சகோதரி, தொர்சி நகரபிதா, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலகுமாரன், தொர்சி தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி அமிர்தா ஜெயக்குமார், தொர்சி தமிழ்ச் சங்கத்தலைவர் திரு. நல்லதம்பி ஜெயசீலன்ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தொர்சி தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அனைத்து மாணவர்களும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழ – ஊடகப்பிரிவு)

Leave a comment