ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் பசுமைத் தாயகம் பங்கேற்பு

5817 0

rammmmmmmmஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில், வரும் 29ஆம் திகதி இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயீத் அல் ஹூசைன் வெளியிடுகிறார்.
இன அழிப்பைத் தொடரும் இலங்கை அரசின் சதிக்கு ஐநா அவை உடன்படக் கூடாது என்றும், கடந்த 2015ஆம் ஆண்டு தீர்மானம் முழு அளவில் நிறைவேற்றப்படுவதை ஐநா அவையும் உலக நாடுகளும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதிகள் ஐநா மனித உரிமை அவையில் வலியுறுத்துவார்கள்.

Leave a comment