கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் பிக்கு சத்தியாக்கிரகம்!

236 0

நாட்டை பிளவுபடுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்படுவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. 

கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் கடந்த திங்கட்கிழமையன்று குறித்த பிக்கு தனது போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

 புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிப்பவர்களுக்கும், தமிழீழத்தை கோருபவர்களுக்கும் மற்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை போகும் மேற்குலக நாடுகளும் தனது எதிர்ப்பை தெரிவித்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார். 

Leave a comment