வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

221 0

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அதற்கு முதல் நாளான 14 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடுமுறை தினத்திற்கான மாற்று பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment