பேரூந்து புத்தளத்தில் யானையுடன் மோதி விபத்து

344 0

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (23) இரவு பயணித்த அதி சொகுசு பேரூந்து நள்ளிரவு புத்தளத்திற்க்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மணி அளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேரூந்து வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியுள்ளமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. 

இதன் போது விபத்திற்கு உள்ளான யானை உயிரிழந்துள்ளதோடு, குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேரூந்தும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment