கால் உடைந்த குதிரையில் கட்டப்பட்ட கரத்தையே இந்த அரசாங்கம்- சந்திம வீரக்கொடி

7329 0

நாட்டில் கடந்த காலம் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வுகளுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே மீண்டும் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கமானது, கால் உடைந்த குதிரைகளின் மீது கட்டப்பட்டுள்ள கரத்தை போன்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சரவை தற்காலிகமானது என பிரதமர் அறிவித்துள்ளமையானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகியோர் எமது நாட்டில் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தோசப்படுத்த அமைச்சுப் பதவிகளை வழங்கினாலும், அமைச்சுக்கள் கிடைக்காதவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக காணப்படுவதாகவும், இது அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment