கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் ஜனாதிபதி தலைமையில் நாளை

246 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (24) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நாளை காலை 8.30 மணிக்கு ஜனாதிபதியின் கொழும்பு வாசஸ்தலத்திலும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு விடயங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்

Leave a comment