எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்!

197 0

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார். 

கண்டி பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறினார். 

அதேநேரம் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment