பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனும் தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை ஆயினும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசனும் அதே தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் ரிஷாட் பதியூதினும் அதே தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிலிட்டுள்ளார்.
அரச கட்சி கூட்டத்தின் போது பிரதமர், அமைச்சர் தொகையை 30 இற்குள் வைத்துக்கொள்ள தான் தடுமாறுவதாகவும், எவராவது சுயமாக முன்வந்து அமைச்சு பதவிகளை பெறாமல் இருக்க முடியுமா எனக்கேட்டார். அவசியமானால், நான் அமைச்சு பதவி ஏற்காதிருக்கிறேன் என தெரிவித்தாகவும் அவர் குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.