குறுநாகல்-தம்புள்ள பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதாக குறுநபகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியை வைத்திசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.

பஹலகம என்ற இடத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர்ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொக்கரெல்ல பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.