மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அவர் தலைமையிலான   இடைக்கால  அரசாங்கத்தின்  நிர்வாக செயற்பாடுகளுக்கு மாத்திரமே  மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இத் தீர்ப்பினை தொடர்ந்து நாட்டில் பிரதமர், அமைச்சரவை கிடையாது என்று மாறுப்பட்ட  கருத்துக்கள்  மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.  இது  முற்றிலும் தவறான  நிலைப்பாடாகும்.

தற்போதை அரசியல் நெருக்கடியின் காரணமாக அடுத்த வருடத்தில் அரச நிர்வாகத்தின் முன்னெடுப்புக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும். இதற்கு ஜனவரியில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் அல்லது    நாட்டு நலனை கருத்திற் கொண்டு இடைக்கால வரவு, செலவு  திட்டத்தினை  முதல் காலாண்டிற்கு  அமுல்படுத்த வேண்டும்  என்றார்.