கல்கிஸ்ஸை – இரத்மலானை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை – இரத்மலானை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது குறித்த வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையினாலேயே மேற்கண்ட விபத்து சம்பவித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

