பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் மலர்ந்தது நாம் இதழ்!

357 0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான இன்று (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்ற தொடருந்தில் வைத்து, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மீண்டும் வெளியிட்டுவைக்கப்பட்டது நாம் இதழ்.
சற்று வித்தியாசமாக, தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் வீரமரணமடைந்த 10.48 மணிக்கு குறித்த சஞ்சிகை மீள் வருகையாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. நூலின் முதல் பிரதியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகே}; அவர்கள் வெளியிட்டுவைக்க தமிழர் கல்விமேம்பாட்டுத்துறை மேலாளர் திருமதி அரியரட்ணம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. சிறப்புரைகளும் இடம்பெற்றன.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த எழுச்சிக் கானங்கள் ஒலிக்க நிகழ்வு மேலும் சிறப்படைந்தது.

dscn4419

dscn4420

dscn4424

dscn4426

dscn4428

dscn4431

dscn4439

dscn4441

dscn4444