சிகரெட்டுகளுடன் சீன பிரஜைகள் சிக்கினர்

508 0

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை  இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த  சந்தேக நபர்களை  சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த  ஆண்கள் இருவரும்,  பெண்ணொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கொங்கோவிலிருந்து நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த நபர்களின் பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டுள்ளனர்.

318 பொதிகளில் சுமார் 34 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 63 ஆயிரத்து 600 சிகரெட் பக்கெற்றுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment