தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார்-கெஹலிய

298 0

தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதற்கு சபாநாயகர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு அதிகாரம் இருப்பதாக மாயை ஒன்றை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஐக்கிய தேசிய கட்சி ஊடகங்களுக்கும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியினர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவை அதிகாரிகளுக்கு அழுத்துங்களை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டுமென்றார்.

Leave a comment