பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீர்வில்லை

238 0

பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் கலந்துரையாடி தீர்வொன்று எட்டவுள்ளதாக பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதங்களில் எருபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது.

எனினும் கடந்த நவம்பர் மாதம் மூன்று தடவைகள் எருபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் ஒரு தடவையே குறைக்கப்பட்டதுடன், அதுவும் இரண்டு சதவீதத்தால் குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Leave a comment