போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்து வந்த நபர் சிக்கினார்

247 0

அக்கரைப்பற்று பிரதேசத்தில்  நீண்ட  காலமாக போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்து வந்த நபரொருவரைகைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த குறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரங்கள், விவாக இரத்து சான்றிதழ்கள், கடவுச் சீட்டு பத்திரங்கள் போன்றவற்றை நீண்ட காலமாக தயாரித்து விநியோகித்து வந்த நிலையில் அம்பாறை விஷேட புலன் விசாரணைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம்பாறை புலன் விசாணைப் பிரிவு பொலிஸார் குறித்த நபரை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது இலங்கை மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் அனுமதிக்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 12, கடவுச் சீட்டு போட்டோப் பிரதிகள், போலி ஆவணங்களைத் தயாரிக்க பயன்படும்  நவீன ரக உபகரணங்கள், கணணி மற்றும் பிறின்டர் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலி ஆவணங்கள் மற்றும் அதனைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரண்களுடன் கைது செய்யப்பட்ட நநபரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment