எலிக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

261 0

பொலன்னறுவை பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிக்குள் 81 பேர் எலிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தும் உள்ளனர்.

எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமையினாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலன்னறுவை சுகாதாரப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment