ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

283 0

எதிர்வரும் காலத்தில் நடைபெற உள்ள பொது தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நியமிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட கலந்துரையாடல் ஒன்று நாளை (04) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விஷேட அறிக்கை ஒன்யை தெரிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று மாலை சுமார் ஒரு மணிநேரம் அளவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment