ஜா-எல யில் தங்க ஆபரணங்கள் கொள்ளை

332 0

ஜா – எல பகுதியில் நேற்றிரவு நடைக் கடையொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜா- எல ரயில் நிலைய வீதியில் அண்மைந்துள்ள நகைக் கடை  ஒன்றுக்கு மூவர் சைக்களில் சென்று  கடை ஊழியர்களுக்கு துப்பாக்கி மற்றும் கத்தி காட்டி அச்சுறுத்தி அங்கிருந்து, தங்க நகைகள் உள்ளடங்கிய 12 பெட்டிகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாவாகும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment