காங்கேசன்துறை இராணுவ சோதனை சாவடி நீக்கம்

518 0

kks_army_checkpoint-5சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டது.
இதனை அடுத்து காங்கேசன்துறை  வீதியில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடை நீக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது குறித்த பேரூந்துகள் காங்கேசன்துறை வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment