நீதிமன்றத்தில் அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க தயார்- முப்படைகளின் பிரதானி

262 0

பொறுப்பு வாய்ந்த சிரேஸ்ட அதிகாரி என்றவகையில் நான் எந்த குற்றத்தையும் வேண்டுமென்று செய்யவில்லை என தெரிவித்துள்ள முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன நீதிமன்றத்தின் முன்னாள் அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

சிஐடியினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகமொன்றிற்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது பதவிக்காலத்தில் எந்த சட்டவிரோதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை வேண்டுமென்றே எந்த தவறையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக எனக்கு தெரிந்த அனைத்தையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment