விஷேட உரை ஒன்றை ஆற்ற தயாராகிறாராம் மைத்திரிபால!!!

323 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் 4ஆம் திகதி சிறப்பு மாநாடு ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திலேயே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இச் சிறப்பு மாநாடானது கொழும்பிலுள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகவும் குறித்த மாநாட்டில்  விஷேட உரை ஒன்றை ஆற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ மேலும் தெரிவித்தார்.

Leave a comment