பார்வையாளர் கலரி, சபாநாயகர் பார்வையாளர் கூடம் என்பன நாளையும் மூடப்படும்

220 0

பார்வையாளர் கலரி, சபாநாயகர் பார்வையாளர் கூடம் என்பன நாளைய பாராளுமன்ற அமர்வின்போதும் மூடப்படும் என படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பார்வையாளர் கலரி மூடப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே நாளைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்ற அமர்வு கூடும்போது பார்வையாளர் கலரி, சபாநாயகர் பார்வையாளர் கூடம் என்பன மூடியே காணப்படும் என படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment