தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!

305 0

தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரையில் மாவீரர் ஒருவரின் பிள்ளை கச்சான் விற்பதை அவதானித்தோம்.

உலகெலாம் மாவீரர்   உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க தயாராகிவரும் நிலையில் கடற்கரையில் கச்சான் விற்கும் அந்த சிறுவனின் பேச்சு எம்மை சோகத்தில் ஆழ்த்தியது.

தனது தந்தை இயக்கத்திற்கு போய் இறந்து விட்டதாக கூறிய அந்த சிறுவன் அப்பா இறந்த பின் தனது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் தனது தாத்தாவுடன் வாழ்ந்து வருவதாக கூறினான்.

தனது தாத்தாவான தவராசா சவுக்கடி கடற்கரையில் கூலிக்கு மீன்பிடித்து வருவதாகவும் அவர்களுக்கு மிகு‌ந்த கஷ்டம் எனவும் தெரிவித்தான்.

தாத்தாவின் வறுமை நிலை காரணமாக பாடசாலை விட்டு வந்து சவுக்கடி கடற்கரையில் தினமும் கச்சான் விற்பதாக கூறிய அந்த சிறுவன் தனக்கு படிப்பதற்கு சரியான விருப்பம் எனவும் தெரிவித்தான்.

Leave a comment