நாகை நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் சாலை விபத்தில் பலி

299 0

நாகை மாவட்டத்தில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தனர். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், நாகை மாவட்டம் நீர்மூலை முகாமில் தங்கியிருந்தவர்கள் சிலர் இன்று தங்கள் பகுதிக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், அமுதா, சுமதி, சரோஜா, ராஜேஸ்வரி ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மணிகண்டன் என்பவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கஜா புயலால் உடமைகளை இழந்து தவித்துவந்த இந்த பெண்கள், சாலை விபத்தில் உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment