நிதியுதவிகள் தடைப்பட்டமைக்கு ஐ.தே.கட்சியே காரணம் – செஹான் சேமசிங்க

283 0

மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான நிதி ஒதுக்கீடு சட்ட மூலத்தை முன்வைப்பது தொடர்பில் கலந்தாலோசித்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக அடுத்த வருடத்திற்கான வரவு, செலவு திட்டம் இதுரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் சில முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக இன்று நாட்டுக்கு கிடைக்கப் பெறவிருந்த நிதியுதவிகள் தற்காலிகமாக தடைப் பெற்றுள்ளது.

எனினும் இத் தடைகளை எவ்வாறு தகர்த்து மீண்டும் சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment