தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக – ஸ்டாலின்

245 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். 

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கஜா புயல் வரும் என மத்திய அரசு எச்சரித்திருந்ததால், ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.
புயல் ஏற்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் தமிழக அரசு ஓரளவு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அரசை பாராட்டினேன். தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக.
புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்டேன். கஜா புயலால் எட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்பு அடைந்துள்ளது.
மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின் சீரமைப்பு பணியை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம் என தெரிவித்தார்.

Leave a comment