புத்தளம் வரையான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

485 0

புத்தளம் வரையான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்று (17) இரவு 10 மணி முதல் நாளை (18) நள்ளிரவு வரையில் இப்பகுதி வழியான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம புகையிரத நிலையத்திலிருந்து ஜாஎல புகையிரத நிலையம் வரையான பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள நீர் வழங்கள் சேவை காரணமாக இப்பகுதி வழியான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பொறுப்பதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Leave a comment