யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் !

900 10

யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு யூ.எஸ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் உன்னதமான ஊடக சுதந்திரத்தை பாதுகாத்து, ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா யோகரட்ணம் (ராதேயன்), சின்னத்துரை தில்லைநாதன், ஆ.நா.சு.திருச்செல்வம்;, கந்தசாமி அரசரட்ணம், விநாயகம் அற்புதானந்தன், மு.வாமதேவன், இளையதம்பி சற்குருநாதன்;, நா.யோகேந்திரநாதன் அமரர்.சிதம்பரநாதன் திருச்செந்தில்நாதன், அமரர்.பொன்.பூலோகசிங்கம்; ஆகிய சிரேஸ்ர ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Leave a comment