கஜா புயல் காரணமாக சில ரெயில்கள் ரத்து – சேவைகளிலும் மாற்றம்

270 0

கஜா புயல் இன்று மாலை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரெயில்கள் ரத்து, ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி-ராமேஸ்வரம் மற்றும் மதுரை-ராமேஸ்வரம் இடையே இயங்கக்கூடிய பயணிகள் ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை புறப்படவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி புறப்பட வேண்டிய விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரெயில் ராமேஸ்வரம் மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒக்காவிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரெயில் மதுரை வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்-ஒக்கா விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி மற்றும் மன்னார்குடி ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து திருச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் விரைவு ரெயில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி, சென்னையில் 3ம் எண் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a comment