தெல்லிப்பளையில் 160 குண்டுகள் மீட்பு

283 0

625-500-560-350-160-300-053-800-900-160-90யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51 குண்டுகள், எம்.பீ.எம்.ஜீ குண்டுகள் 1600 உள்ளிட்டவைகள் இதன் போது மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.